நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் - Nakkheeran Publications

வீரப்பன்

வீரப்பன்
ஆசிரியர்: நக்கீரன் கோபால்
பதிப்பாளர்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: January 2024
பக்கங்கள்: 456
எடை: 620 கிராம்
அட்டை: Hard Bound
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு
ISBN: 978-81-9702-831-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 450.00
தள்ளுபடி விலை: ரூ. 400.00

அஞ்சல் செலவு: ரூ. 60.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்... யாரும் அறியாத வீரப்பனை பெருங்குற்றவாளியாய் வளர்த்து விட்ட வனத்துறை அதிகாரிகள். வீரப்பனை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி அதில் லாபம் அடைந்த தமிழக-கர்நாடக அரசியல் கட்சிகள். வீரப்பனை வைத்து பெரும் வாசகர் பரப்பையும் - பெரும் ஆதாயத்தையும் பெற்றுக் கொண்ட (நக்கீரன் - சன் டிவி உட்பட) மீடியாக்கள்." ஒரு புறம் வீரப்பன் நான் பிரதமராவேன், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க வேண்டும் என்று தன்னை மிகப் பெரிய சாகசக்காரனாக முன்னிருத்திக் கொள்வது வீரப்பன் தன்னை நாடளவில் விளம்பரப்படுத்திக் கொள்வதையே பிரதானமாக்கிக் கொண்டதாகத் தோன்றுகிறது. அப்பாவி மலைவாழ் பெண்களை எஸ்.டி.எஃப் கற்பழித்தது அதனால் தான் அவர்களை கொன்றேன் என்று சொல்லும் வீரப்பன் , தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தன்னால் யாரும் பாதிக்கக் கூடாது என்று சரணடைந்திருந்தால் இவ்வளவு ஆண்கள், பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருக்கமாட்டார்கள். ஆனால் வீரப்பன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது.மற்றொரு புறம் வீரப்பனை பிடித்தே தீருவோம் என்று சவால் விட்டுக் கொண்டிருந்த எஸ்.டி.எஃப். ஒரு கட்டத்தில் வீரப்பனுக்கும் - அதிரடிப்படையினருக்கும் (நீயா நானா ) என்ற ஈகோ பிரச்சினையாக மாறிவிட்டது. உண்மையில் கொடூரமான சித்திரவதைக்குள்ளாகி இவர்கள் அனைவராலும் பாதிக்கப்பட்டவர்கள் மலைவாழ் மக்களே!

Qty:   

நேரடியாக வாங்க : +91-70103 86844

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.